ஒரே கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா -உதயநிதி!



Image result for udhayanidhi and nayanthara still
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. கொரிய மொழி படமான ‘பிளைண்ட்’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நயன்தாரா முதன் முதலாக நடிக்க இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சைக்கோ’ என்ற படத்தில் உதயநிதியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. புத்தர் காலத்தில் வாழ்ந்த  அங்குலிமாலா கதை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு உருவானதுதான் ‘சைக்கோ’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது. அங்குலிமாலா என்பவர் தனது குரு ஆயிரம் மனிதர்களின் விரல்களை வெட்டி கொண்டு வரவேண்டும் என்று சதியெண்ணத்துடன் கூற, குருவின் கட்டளையை நிறைவேற்றும் அங்குலிமாலா 999 பேர்களின் விரல்களை வெட்டி காணிக்கையாக்கிவிடுகிறார். ஆயிரமாவது விரலை வெட்டும் போது ஏற்படும் வித்தியாசமான அனுபவத்தில், அவர் மனம் மாறி பின்னர் புத்த மதத்தில் சேர்ந்து துறவி ஆகிறார் என்பது அங்குலிமாலாவின் கதை. 
உதயநிதி, அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசைமையத்து வருகிறார். பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Comments

Popular Posts