கெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்!

சென்னை: பிரம்மாண்ட படம் ஒன்றில் நடித்த உச்ச நட்சத்திரங்கள் தற்போது பெரிய சிக்கலில் மாட்டி தவித்து வருகிறார்கள். 

சரியாக இரண்டு வருடம் முன்பு அந்த பிரம்மாண்ட படம் வெளியானது. முதல் பாகம் பெரிய வெற்றிபெற்றதை அடுத்து வெகுவேகமாக இரண்டாவது பாகம் தயார் ஆனது. 

யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு இரண்டாவது பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன 
ஆனால் இந்த படத்தில் நடித்த எல்லோரும் தற்போது பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூன்று மூத்த நடிகர்களுக்கு அதற்கு பின் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா முழுக்க வைரலாகியும் அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஹீரோ நிலை

ஹீரோ நிலை 
அதேபோல் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த இளம் நடிகர் அதேபோல் பிரம்மாண்ட கதை ஒன்றில் மீண்டும் நடித்தார். ஆனால் பாவம் அவரின் படம் எல்லா மொழியிலும் மிக மோசமாக தோல்வி அடைந்தது. படத்தின் கதையும் திருட்டு கதை என்ற உண்மை வெளியானது.

வில்லன் நிலை


வில்லன் நிலை 
அதேபோல் படத்தின் இன்னொரு முக்கிய ஹீரோ நிலை அதை விட மோசம் ஆனது. இந்த பிரம்மாண்ட படத்திற்கு பின் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. உடலிலும் நிறைய பிரச்சனைகள் வந்து, உடல் எடை மெலிந்து மிக மோசமான நிலையை அடைந்தார். இதற்காக இப்போதும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோசம்

மோசம் 
அதேபோல் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கதையை நகர்த்தி சென்ற ஹீரோயின்கள் இருவருக்கும் இப்போது படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முதல் ஹீரோயின் மிகவும் குண்டாகி உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொருவரோ வெறும் ஐட்டம் நம்பரில் மட்டும் ஆடி வருகிறார்.

என்ன காரணம்

என்ன காரணம் 
அவருக்கு எந்த மொழியிலும் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த பிரம்மாண்ட படத்தில் நடித்த கெட்ட நேரமா இது, அதில் நடித்து துரதிருஷ்டம் துரத்துகிறதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

Comments

Popular Posts