ஐயோ.. காசு கொடுத்து டிரெண்ட் செய்த முக்கிய நடிகர்.. வெளியான உண்மை.. ரசிகர்கள் அதிர்ச்சி!







சென்னை: இணையத்தில் முக்கிய நடிகர் ஒருவர் காசு கொடுத்து தன்னை குறித்த டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது.
சமூக வலைதளத்தில் நடிகர் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த ரசிகர்கள் தங்கள் நடிகரின் படம் வந்தால் அதை டிவிட்டரில் டிரெண்ட் செய்வார்கள்.
இதற்காக மிகவும் கவர்ச்சியாக நிறைய டேக்குகள் உருவாக்கப்படும். சில சமயம் இந்த டேக்குகள், தேசிய அளவில், உலக அளவில் கூட வைரலாகும்.


சண்டை
அதே சமயம் இந்த டேக்கை வைத்து அவ்வப்போது ரசிகர்கள் சண்டை போடுவதும் வழக்கம். முக்கியமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இப்படி சண்டை போடுவார்கள். இந்த சண்டை மிக மோசமான நிலையை கூட சமூக வலைத்தளங்களில் அடைந்துள்ளது.

யார் எல்லாம்

அதிலும் ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோவின் ரசிகர்கள் உடல் ரீதியாக கிண்டல் செய்வது. இன்னொரு ஹீரோவை மற்ற ஹீரோவின் ரசிகர்கள் இறந்துவிட்டார் என்று கூறி கண்ணீர் அஞ்சலி டேக் உருவாக்கி வைரல் செய்வது என்று சண்டை நடந்துள்ளது. இந்த ரசிகர்கள் சண்டை நாளுக்கு நாள் அருவருப்பாக செல்வது குறிப்பிடத்தக்கது.





சிக்கல்

இந்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவர் இதுபோல டிரெண்ட் செய்வதற்கு தன்னுடைய ரசிகர்களுக்கு பணம் கொடுக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது. இணையத்தில் அவர் தனக்கு சாதகமாக டிரெண்ட் செய்வதற்கு பணம் கொடுக்கிறார். இதற்காக தனி குழுவை அவர் வைத்துள்ளார்.


மோசம்

இந்த குழு கவர்ச்சிகரமான டிரெண்ட்களை உருவாக்கும். மற்ற ஹீரோக்களின் படம் வரும் நேரத்தில் இதுபோல டிரெண்ட் செய்து, மற்ற ஹீரோக்களின் பட விளம்பரத்தை மறைமுகமாக இவர்கள் தடுக்கிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் சிலர் புகைப்பட ஆதாரங்களை கூட வெளியிட்டுள்ளனர்.





எவ்வளவு பணம்

இதற்காக அந்த ஹீரோ சில லட்சங்களை செலவு செய்துள்ளார். சில ரசிகர்களை இதற்காக அவர் பணியில் அமர்த்தி இருக்கிறார் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Comments

Popular Posts